‘பிக் பாஸ் 4’-க்காக குவாரண்டைனில் சுசித்ரா… நள்ளிரவில் ‘கொலை செய்ய வர்றாங்க’ன்னு அலறி ஓடினாரா?

  • October 29, 2020 / 08:00 AM IST

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது . இந்த சீசன் 4-யில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருந்தார்கள். தினமும் பல பிரபலங்களின் பெயர்களை குறிப்பிட்ட வண்ணம் இருந்தது கோலிவுட் வட்டாரம்.

தொடர்ந்து 105 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித் ஆகிய 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் ‘விஜய் டிவி’ மற்றும் ‘ஜீ தமிழ்’ மூலம் ஃபேமஸான தொகுப்பாளினி அர்ச்சனா என்ட்ரியானார். கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் ஷோவில் ரேகா எலிமினேட் செய்யப்பட்டார். விரைவில் பிரபல ஆர்ஜேவும், பாடகியுமான சுசித்ரா இந்த ‘பிக் பாஸ்’ சீசன் 4-யில் வைல்ட் கார்ட் மூலம் நுழைய உள்ளார். இதற்காக ‘கொரோனா’ டெஸ்ட் எடுக்கப்பட்டு ஒரு ஹோட்டலில் குவாரண்டைனில் இருந்து வந்தார் சுசித்ரா.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் அவர் தங்கியிருந்த அறையிலிருந்து ரிசப்ஷன் வரை திடீரென ஓடிவந்து தன்னை ஒருவர் கொலை செய்ய வருவதாகவும், அவரிடமிருந்து தன்னை காப்பாற்றுமாறும் கூறியிருக்கிறார். பின், விஜய் டிவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து சுசித்ராவிடம் பேசிய பிறகு தான் சமாதானமானார் என்று கோலிவுட்டில் தண்டோரா போடப்படுகிறது. இது தொடர்பாக சுசித்ராவிடம் விசாரிக்கையில் “இந்த தகவல் உண்மையல்ல. வதந்தியே” என்று கூறியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus