ட்விட்டரில் மணிரத்னம் பெயரில் போலி அக்கவுண்ட்… ரசிகர்களை உஷார்படுத்திய சுஹாசினி!

  • June 3, 2021 / 10:28 AM IST

சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் மணிரத்னம். இவர் இயக்கிய முதல் படமே கன்னட மொழியில் தான். அது தான் ‘பல்லவி அனு பல்லவி’. இதில் அணில் கபூர் கதையின் நாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக லக்ஷ்மி நடித்திருந்தார். இந்த படத்தின் ஹிட்டிற்கு பிறகு இயக்குநர் மணிரத்னமிற்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து மலையாள மொழியில் ‘உணரு’, தெலுங்கு மொழியில் ‘கீதாஞ்சலி’, ஹிந்தி மொழியில் ‘தில் சே, குரு’, தமிழ் மொழியில் ‘பகல் நிலவு, இதயகோயில், மௌன ராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், அஞ்சலி, தளபதி, ரோஜா, திருடா திருடா, பம்பாய், இருவர், அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், ஆய்த எழுத்து, ராவணன், கடல், ஓ காதல் கண்மணி, காற்று வெளியிடை, செக்கச்சிவந்த வானம்’ என பல படங்கள் இயக்கும் வாய்ப்பு குவிந்தது. 1988-ஆம் ஆண்டு நடிகை சுஹாசினியை திருமணம் செய்து கொண்டார் மணிரத்னம். இவர்களுக்கு நந்தன் என்ற மகன் உள்ளார்.

இப்போது மணிரத்னம் பிரம்மாண்ட படமான ‘பொன்னியின் செல்வன்’ஐ இயக்கி கொண்டிருக்கிறார். இந்நிலையில், நேற்று (ஜூன் 2-ஆம் தேதி) இயக்குநர் மணிரத்னமின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். தற்போது, மணிரத்னமின் மனைவி சுஹாசினி ட்விட்டரில் “மணிரத்னம் பெயரில் ஒரு நபர் போலியான ட்விட்டர் அக்கவுண்டை கிரியேட் செய்து, பிறந்த நாளை முன்னிட்டு ட்விட்டரில் என்ட்ரியாகியுள்ளதாக கூறியிருக்கிறார். மணிரத்னமிற்கு ட்விட்டரில் அதிகாரப்பூர்வ அக்கவுண்ட் இல்லை என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus