ஹாரர் படமான ‘அரண்மனை 3’… அடுத்த ஷெடியூலுக்கு நாள் குறித்த சுந்தர்.சி!

  • September 28, 2020 / 01:53 PM IST

தமிழ் திரையுலகில் ஒரு படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானால், அடுத்ததாக அந்த நடிகரின் படத்துக்கோ அல்லது அந்த படத்தை இயக்கிய இயக்குநரின் படத்துக்கோ ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அதைவிட பல மடங்கு எக்ஸ்பெக்டேஷன், அதே படத்தின் பார்ட் 2 உருவாகும்போது ரசிகர்களுக்கு இருக்கும்.

பார்ட் 1 & 2 இரண்டுமே ஹிட்டாகி இப்போது பார்ட் 3 தயாராகி கொண்டிருக்கிறது. அது தான் தமிழ் படமான ‘அரண்மனை 3’. 2014-யில் சுந்தர்.சி இயக்கி, நடித்த ‘அரண்மனை’-க்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், அதன் பார்ட் 2-வை 2016-யில் எடுத்தார். இதுவும் ஹிட்டாக, இப்போது ‘அரண்மனை’ பார்ட் 3-யை இயக்கி வருகிறார் சுந்தர்.சி.

இந்த படத்தில் ஹீரோவாக ஆர்யா நடித்து வருகிறார். மேலும், முக்கிய ரோல்களில் ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, விவேக், யோகி பாபு, சாக்ஷி அகர்வால் மற்றும் பலர் நடிக்கின்றனராம். ஹாரர் படமான இதன் முதல் இரண்டு பாகங்களில் ஹீரோயின்ஸ் பேயாக மிரட்டியிருந்தார்கள். இந்த படத்தில் ஆர்யா தான் பேயாக வலம் வந்து திகிலூட்டப்போகிறாராம். தற்போது, இதன் புதிய ஷெடியூல் ஷூட்டிங்கை வருகிற அக்டோபர் 12-ஆம் தேதி முதல் ஆரம்பிக்க இயக்குநர் சுந்தர்.சி ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus