அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ படக்குழுவினரை பாராட்டி ட்வீட் போட்ட ‘சூப்பர் ஸ்டார்’!

  • January 5, 2022 / 10:37 AM IST

தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். ‘அல வைகுந்தபுரமுலோ’ படத்தின் வெற்றிக்கு பிறகு அல்லு அர்ஜுன் நடிப்பில் இரண்டு பாகங்களாக உருவாகி வந்த படம் ‘புஷ்பா’. இதன் முதல் பாகம் கடந்த ஆண்டு (2021) டிசம்பர் 17-ஆம் தேதி தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு திரையரங்குகளில் ரிலீஸானது.

இப்படத்தினை சுகுமார் இயக்க, ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ நிறுவனம் தயாரித்திருந்தது. இதில் ராஷ்மிகா மந்தனா, சுனில், தனஞ்ஜெய், ராவ் ரமேஷ், அனுஷயா பரத்வாஜ், அஜய் கோஷ் நடித்திருந்தனர். மேலும், பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் டாப் மலையாள ஹீரோக்களில் ஒருவரான ஃபஹத் ஃபாசில் நடித்திருந்தார்.

இப்படத்தில் இடம்பெறும் ‘ஓ சொல்றியா’ என்ற ஐட்டம் பாடலுக்கு முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா நடனமாடியிருந்தார். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தை பார்த்து ரசித்த தெலுங்கு ‘சூப்பர் ஸ்டார்’ மகேஷ் பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் படக்குழுவினரை பாராட்டி ஸ்டேட்டஸ் போட்டுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus