என்ன வாழவைத்த தமிழ் மக்களே – கர்நாடகாவில் ரஜினி பேச்சு !!

  • November 3, 2022 / 09:22 AM IST

ரஜினிகாந்த் நெல்சன் திலீப்குமாருடன் இணைந்து தனது அடுத்த படமான ‘ஜெயிலர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் .நெல்சன் திலீப்குமார் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் சில முக்கிய நட்சத்திர நடிகர்களுக்கு ‘ஜெயிலர்’ படத்திற்காக டெஸ்ட் லுக் சமீபத்தில் செய்துள்ளார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் நடந்தது.

ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு , மலையாள நடிகர் விநாயகன் , தரமணி புகழ் வசந்த் ரவி ஆகியோர் ‘ஜெயிலர்’ படத்தின் மிக முக்கிய பாத்திரங்களில் நடிப்பது உறுதியாகி உள்ளது . இந்நிலையில் பருத்திவீரன் படத்தில் சித்தப்பு என்கிற பாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகர் சரவணன் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் என்ற தகவல் தற்போது வெளியாகி இருந்தது .

இந்நிலையில் சமீபத்தில் தான் ஜெயிலர் படத்திலிருந்து ஒரு போஸ்டரை படக்குழு வெளியிட்டு இருந்தது . அதன் பிறகு ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில் லீக் ஆகி இருந்தது .சென்னையில் சில நாட்கள் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடலூர் மாவட்டத்தில் நடந்து வருகிறது . இந்நிலையில் ஜெயிலர் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு மைசூரில் நடக்க உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது .

இது ஒரு பக்கம் இருக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கர்நாடகா ரத்னா விருது வழங்கும் விழாவில் கலந்துக்கொள்ள ரஜினி பெங்களூர் சென்று இருந்தார் . அங்கு மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் அவர்களை பற்றி பேசினார் . மேலும் அந்த வந்த விழாவில் ரஜினி என்னை வாழ வைத்த
தெய்வங்களான தமிழ் மக்களே என்று சொன்ன பொது மிகப்பெரிய மக்கள் ஆரவாரம் செய்தனர். தற்போது அந்த வீடியோ ட்ரெண்ட் ஆகி வருகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus