இந்த நடிகருடன் நடிக்க ஆசை! – வெளிப்படையாக பேட்டியளித்த சூப்பர் ஸ்டார் மகள்

  • October 8, 2020 / 10:18 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தல அஜித் 1990ஆம் ஆண்டு “என் வீடு என் கணவர்” என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டார்.

பின்பு 1996-ஆம் வருடம் வெளிவந்த “காதல் கோட்டை” படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் கனவுக்கண்ணனாக வலம் வரத்தொடங்கினார். பின்பு 1999-ஆம் வருடம் வெளிவந்த “அமர்க்களம்” படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக மாறினார்.

‌அதே ஆண்டு இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளிவந்த “வாலி” படத்தில் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த படத்தில் அவர் சிறந்த நடிப்பால் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் அவார்ட் பெற்றார்.

அமர்க்களம் படத்தில் அவருடன் நடித்த நடிகை ஷாலினியை காதலித்து 2000-ம் வருடம் திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு அனோஷ்கா, ஆத்விக் என இரண்டு குழந்தைகள் தற்போது உள்ளார்கள்.

தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கும் அஜித் குமார், ஒரு பிரபல கார் ரேஸரும் கூட. அஜித் எவ்வளவு பெரிய பிரபலமான நடிகராக இருந்தாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாத தன்னடக்கமான மனிதர் என்று பலர் கூறியிருக்கிறார்கள். இதுவே இவருக்கான ரசிகர் பட்டாளத்தை குவித்துள்ளது.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா, தான் படத்தில் நடிப்பதாக இருந்தால் கண்டிப்பாக நடிகர் அஜித்துடன் நடிப்பதற்கு ஆசை இருப்பதாக பல வருடங்களுக்கு முன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இதனால் சூப்பர் ஸ்டாரின் மகளுக்கு நடிகர் அஜித்துடன் நடிப்பதற்கு தான் விருப்பம் என்று தற்போது வைரலாக செய்தி பரவி வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus