கேப்டன் விஜயகாந்துக்கு நடந்த அறுவை சிகிச்சை !

  • June 21, 2022 / 06:31 PM IST

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவர் கேப்டன் விஜயகாந்த் . தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ஆளுமையாக இருந்தவர் . நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்து பல நல்ல காரியங்களை வெற்றிகரமாக செய்து முடித்தவர் . அதன் பிறகு அரசியில் கட்சி ஆரம்பித்து அதிலும் பெயர் சொல்லும்படியான வெற்றியை பெற்றார் . அதன் பிறகு இவருக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் முன்பு அரசியில் களத்தில் முன்பு போல் செயல்பட முடியவில்லை . உடல்நலக்குறைவால் அவ்வப்போது மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார். இதனால் இவரால் அரசியில் மற்றும் கட்சி தொடர்பான பணிகளில் முன்பு போல் செயல்பட
முடியவில்லை.

இந்நிலையில் திடீர் என்று ஏற்பட்ட உடல்நலக் குறைவால் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் விஜயகாந்த் . விஜயகாந்திற்கு ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் அறுவை சிகிச்சை மூலம் காலில் இருந்து 3 விரல்கள் அகற்றப்பட்டுள்ளது என்ற செய்தி வெளியாகி உள்ளது .

தனது இயல்பான நடிப்பாலும் , அன்பான குணத்தாலும் தமிழக மக்களின் அன்பை பெற்ற கேப்டன் விஜயகாந்தின் இந்த நிலைமை தமிழக மக்களுக்கு சோகத்தை தந்துள்ளது . அவர் விரைவில் உடல் நலம் பெற்ற வீடு திரும்ப வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் எண்ணங்களாக இருக்கிறது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus