சூர்யா – இயக்குநர் பாலா கூட்டணியில் உருவாகும் புதிய படம்… ஷூட்டிங் எப்போது ஆரம்பமாகுது தெரியுமா?

  • August 11, 2021 / 02:56 PM IST

முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா நடித்து, தயாரித்த கடைசி படமான ‘சூரரைப் போற்று’ கடந்த ஆண்டு (2020) OTT-யில் ரிலீஸானது. ‘சூரரைப் போற்று’ படத்துக்கு பிறகு சூர்யா நடிப்பில் கெளதம் மேனன் இயக்கும் ‘நவரசா’ வெப் சீரிஸும் மற்றும் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’, பாண்டிராஜ் இயக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’, த.செ.ஞானவேல் இயக்கும் ‘ஜெய் பீம்’ என மூன்று படங்களும் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘நவரசா’ வெப் சீரிஸ் கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘நெட்ஃப்ளிக்ஸ்’-யில் ரிலீஸானது. ஒன்பது குறும்படங்களை கொண்ட இவ்வெப் சீரிஸில் சூர்யா ‘கிட்டார் கம்பி மேலே நின்று’ என்ற குறும்படத்தில் நடித்திருந்தார். டாப் இயக்குநர்களில் ஒருவரான கெளதம் மேனன் இதனை இயக்கியிருந்தார்.

சமீபத்தில், சூர்யா தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொல்லியிருப்பதாக கோலிவுட்டில் தண்டோரா போடப்பட்டது. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பாலா இயக்க உள்ளாராம். தற்போது, இந்த படத்தின் ஷூட்டிங்கை இந்த ஆண்டு (2021) டிசம்பர் மாதம் ஆரம்பிக்க இயக்குநர் பாலா ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus