கன்னியாகுமரி மக்களுக்கு சூர்யா செய்த உதவி!

  • April 15, 2022 / 12:30 PM IST

நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் எதற்கும் துணிந்தவன் . இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி இருந்தார் . இந்த படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது . இந்த நிலையில் நடிகர் சூர்யா தற்பொழுது பாலா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் .

நடிகர் சூர்யா ஏற்கனவே பாலா இயக்கத்தில் நந்தா மற்றும் பிதாமகன் ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார்.
இந்த இரண்டு படம் நல்ல வெற்றியை பெற்றது . இந்த பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா மூன்றாவது முறையாக நடிக்கும் படத்தினை 2D என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்து வருகிறது . படத்தில் சூர்யா விசை படகு ஓட்டும் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது .இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார் . ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக மூன்று வீடுகள் கட்ட பட்டுள்ளதாகவும் படப்பிடிப்புக்கு பின் அந்த வீடுகளை அந்த ஊரில் சொந்த வீடு இல்லாத நபர்களுக்கு இலவசமாக சூர்யா நடிக்க கொடுக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus