ஃபிலிம்ஃபேர் விருதுகள் என்பது திரைப்படத் துறையில் கலை மற்றும் தொழில்நுட்ப சிறப்பை கௌரவிக்கும் வருடாந்திர விருது ஆகும். ஃபிலிம்பேர் விழா இந்தியாவின் மிகவும் பிரபலமான திரைப்பட நிகழ்வுகளில் ஒன்றாகும். விருதுகள் முதன் முதலில் தி டைம்ஸ் குழுமத்தின் ஃபிலிம்ஃபேர் இதழால் 1954 ஆம் ஆண்டில் தேசிய திரைப்பட விருதுகளின் அதே ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் ஆசிரியரான கிளேர் மென்டோன்காவிற்குப் பிறகு அவை ஆரம்பத்தில் “கிளேர் விருதுகள்” அல்லது “தி கிளேர்ஸ்” என்று குறிப்பிடப்பட்டு வந்தது .
1956 ஆம் ஆண்டு இரட்டை வாக்குப்பதிவு முறை உருவாக்கப்பட்டது. இந்த முறையின் கீழ், இந்திய அரசால் நியமிக்கப்பட்ட குழுவால் தீர்மானிக்கப்படும் தேசிய திரைப்பட விருதுகளுக்கு மாறாக, பிலிம்பேர் விருதுகள் பொதுமக்களாலும் நிபுணர்கள் குழுவாலும் வாக்களிக்கப்படுகின்றன. இந்த விழா கடந்த காலங்களில் மற்றும் தற்போதைய ஏற்பாடுகளில் பல்வேறு தனியார் நிறுவனங்களால் நிதியுதவி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் 2020 மற்றும் 2021 -ஆம் ஆண்டிற்கான . ஃபிலிம்பேர் விருது வழங்கும் விழா பெங்களூரில் நடந்தது . இதில் நடிகர் சூர்யா அவர்களுக்கு சூரரைப்போற்று படத்திற்காக சிறந்த நடிகர் விருது கிடைத்தது . விழாவில் பேசிய சூர்யா சில காலமாக அனைவரையும் திருப்தி படுத்தும் படம் எனக்கு கிடைக்கவில்லை , நான் ஏங்கி தவித்துக்கொண்டு இருந்தபோது சுதா இந்த படத்தை எனக்கு கொடுத்துள்ளார் . அதற்காக சுதா அவர்களுக்கு நன்றி என்று கூறினார் . அவர் பேசும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .
#Suriya
You will comeback STRONGER, we all know that.pic.twitter.com/w6RfJl3cSp
— AB George (@AbGeorge_) October 18, 2022