என் மகளை போட்டோ எடுக்க வேண்டாம் – சூர்யா

  • August 10, 2022 / 12:43 PM IST

நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தை இயக்கியவர் இயக்குனர் பாண்டியராஜ். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா ,இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க உள்ள வாடிவாசல் படத்தின் டெஸ்ட் ஷூட் சென்னையில் நடந்தது. வெற்றிமாறன் சூரி நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார்.அந்த படம் வெளியான பின் வாடிவாசல் படம் முழுவதுமாக தொடங்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்து முடிந்தது . படத்திற்கு வணங்கான் என்று தலைப்பு வைத்துள்ளனர் .இந்த படத்தில் நடிகர் சூர்யா இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என்றும் ஒரு வேடத்தில் காது கேளாத மற்றும் வாய் பேசாத நபராக நடிக்கிறார் என்ற செய்திகளும் வெளியாகி இருந்தது .

இந்நிலையில் படத்தின் இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவே இல்லை . செப்டம்பர் மாதம் இந்த படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது .இதனை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்க இருக்கிறார் .

இந்நிலையில் நடிகர் சூர்யா தற்போது தனது குடும்பத்துடன் மும்பை சென்று உள்ளார் . மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் இருந்து வரும்பொழுது மீடியா துறையை சேர்ந்த நபர்கள் வரை போட்டோ எடுக்க முயல்கின்றனர் .அப்பொழுது தனது மகள் மற்றும் மகனை போட்டோ எடுக்க வேண்டாம் என்று அவர்களிடம் சூர்யா கேட்கிறார் மேலும் ஜோதிகாவையும் , அவரையும் போட்டோ எடுக்க அனுமதி வழங்குகிறார் .இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus