அடேங்கப்பா… 5 நாட்களில் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

  • March 15, 2022 / 11:10 AM IST

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’, பாண்டிராஜ் இயக்கிய ‘எதற்கும் துணிந்தவன்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்துள்ளது.

இந்த படம் கடந்த மார்ச் 10-ஆம் தேதி திரையரங்குகளில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் ரிலீஸானது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். சூர்யாவுக்கு எதிராக மோதும் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் வினய் நடித்துள்ளார்.

மேலும், மிக முக்கிய ரோல்களில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், எம்.எஸ்.பாஸ்கர், சூரி, இளவரசு, ‘குக் வித் கோமாளி’ புகழ் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இதற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 5 நாட்களில் இந்த படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.28.35 கோடியும், உலக அளவில் ரூ.60.50 கோடியும் வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus