ரஜினி மற்றும் கமலால் சூர்யா மற்றும் கார்த்திக்கு ஏற்பட்ட பிரச்சனை !

  • September 2, 2022 / 10:45 PM IST

நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தை இயக்கியவர் இயக்குனர் பாண்டியராஜ். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா ,இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க உள்ள வாடிவாசல் படத்தின் டெஸ்ட் ஷூட் சென்னையில் நடந்தது. வெற்றிமாறன் சூரி நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார்.அந்த படம் வெளியான பின் வாடிவாசல் படம் முழுவதுமாக தொடங்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் நடித்து வந்தார் . இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்து முடிந்தது . படத்திற்கு வணங்கான் என்று தலைப்பு வைத்துள்ளனர் .இந்த படத்தில் நடிகர் சூர்யா இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என்றும் ஒரு வேடத்தில் காது கேளாத மற்றும் வாய் பேசாத நபராக நடிக்கிறார் என்ற செய்திகளும் வெளியாகி இருந்தது .

பாலா மற்றும் சூர்யா கூட்டணியில் உருவாகும் வணங்கான் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதத்திற்கு தள்ளிப்போக உள்ளது . இதனால் சூர்யா மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது ..சூர்யா மற்றும் சிறுத்தை சிவா முதல் முறையாக இணைவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது .

இந்நிலையில் நடிகர் சூர்யா வயது முதல் நடிகர் கமல் ஹாசனின் தீவிர ரசிகராக இருந்து உள்ளார் . தனது வீடுகளில் பல இடங்களில் கமல் அவர்களின் புகைப்படத்தை ஒட்டி வைத்திருப்பார் . இதனால் நடிகர் கார்த்தி மற்றும் சூர்யாவிற்கு இடையே பல முறை சண்டை வந்துள்ளது என்று கூறப்படுகிறது . நடிகர் கார்த்தி ரஜினியின் ரசிகராக இருந்துள்ளார் .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus