நிவாரண பணி செய்த ரசிகர்களை பாராட்டி சூர்யா வெளியிட்ட ஆடியோ

  • June 10, 2020 / 09:09 PM IST

இந்தியா முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலர் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இதில் சூர்யாவின் ரசிகர்களும், தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார்கள். இதைப் பாராட்டி சூர்யா ஒரு ஆடியோவை ரிலீஸ் செய்துள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சூர்யா, நடிகர் மட்டுமல்ல 2D எனும் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல படங்களை வெளியிட்டு வருகிறார். மேலும் இவர் அகரம் பவுண்டேஷன் எனும் அறக்கட்டளையின் கீழ் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவி செய்து வருகிறார்.

மேலும் அவர் தனது அறக்கட்டளையின் கீழ் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்து வருகிறார். இந்த வருடம் அக்டோபர் மாதம் வரை இந்த கொரோனாவின் பாதிப்பு நீடிக்கும் என்று அரசு வெளியிட்டுள்ள செய்தி, ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மிகவும் பாதித்துள்ளது. அதனால் மக்கள் தங்களால் இயன்ற நிவாரண உதவிகளை பாதிக்கப்பட்டவருக்கு செய்து வருகிறார்கள் .

இதில் தனது ரசிகர்கள் செய்த உதவியை கண்ட சூர்யா ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். “நிவாரண உதவிகள் செய்து வரும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் நன்றி. உண்மையில் வறுமையில் வாடும் மக்களுக்கு இந்த நிவாரண உதவிகள் சேர்கிறதா என்பதை சரி பார்த்துக்கொள்ளுங்கள். மேலும் யாரும் பிளாஸ்டிக் பொருள்களை உபயோகிக்காதீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus
Tags