மக்களுக்கு விழிப்புணர்வு அடைய சூர்யா செய்த செயல் !

  • November 21, 2022 / 12:13 AM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா . தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 படத்தில் நடித்து வருகிறார் . மிக பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது . இந்த படத்தை தவிர இயக்குனர்கள் பாலா , வெற்றிமாறன் , சுதா , என பல சிறந்த இயக்குனர்களுடன் இவர் அடுத்து அடுத்து பணியாற்ற உள்ளார் சூர்யா .

நடிகர் சூர்யா சினிமாவை தவிர்த்து சமூகம் சார்ந்த பல நல்ல கருத்துக்களை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் ஆர்வம் உடையவர் . அகரம் அறக்கட்டளை மூலம் பல ஏழை மாணவர்களின் படிப்பிற்கு தொடர்ந்து உதவி செய்து வருகிறார் . அந்த வகையில் தற்போது சூர்யா பேசியுள்ள நல்ல கருத்து உடைய வீடியோ சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது .

அந்த வீடியோவில் உறுப்பு தானம் பற்றி பேசி உள்ளார் . மக்கள் அனைவரும் உறுப்பு தானம் செய்வதால் பல மக்களின் உயிரை காப்பாற்றலாம் என்று நடிகர் சூர்யா பேசியுள்ளார் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus