சுஷாந்த் சிங் மரணம் குறித்த மர்ம முடிச்சுகள் அவிழ்த்தது-இவர் காரணமா? Filmy Focusசுஷாந்த் சிங் மரணம் குறித்த மர்ம முடிச்சுகள் அவிழ்த்தது-இவர் காரணமா?

  • August 1, 2020 / 04:08 PM IST

சமீபத்தில் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தனது மும்பை இல்லத்தில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இவர் தற்கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சுமார் 40 பேரிடம் தற்போது வரை விசாரணை நடத்தியுள்ளார்கள். இந்நிலையில் தற்போது சுஷாந்த் சிங் ராஜ்புத் தந்தை அவரது காதலியான ரியா சக்கரவர்த்தி தான் சுஷாந்தின் மன அழுத்தத்திற்கும் தற்கொலைக்கும் காரணம் என்றும், அவர் சுஷாந்திடம் பணம் கையாடல் செய்துள்ளதாகவும் தற்போது போலீசில் புகார் அளித்துள்ளார்.

இந்த சந்தேகத்தை உறுதி செய்வதற்கு ஆதாரமாக சுஷாந்தின் அக்கவுண்ட்டிலிருந்து அவர் இறப்பதற்கு சுமார் ஒரு வாரத்திற்கு முன் பணம் ரியா சக்கரவர்த்தி மற்றும் அவரது உறவினர்கள் அக்கவுண்டிற்கு ட்ரான்ஸ்பர் செய்யப்பட்டதாகவும் ஒரு செய்தி தெரிவித்துள்ளது.

சுஷாந்த் சிங் மன அழுத்தத்தில் இருந்த பொழுது அவருக்கு மேலும் கஷ்டம் கொடுத்து, மேலும் ஒரு கட்டத்தில் மிரட்டி சுஷாந்தின் உடைமைகளை கைப்பற்றியும் சென்றுள்ளாராம் ரியாசக்கரவர்த்தி.

அதுமட்டுமின்றி சுமார் 15 கோடி ரூபாயை ரியா சக்ரவர்த்தி அக்கவுண்டிற்கு சுஷாந்த் டிரான்ஸ்பர் செய்ததாகவும் தெரிகிறது. தற்போது சுஷாந்தின் தந்தை பீகாரில் ரியா மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து ரியா கண்ணீர் மல்க தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் இந்த வீடியோவில் தனக்கு கடவுள் மீதும் நீதியின் மீதும் நம்பிக்கை உண்டு அதனால் நான் இந்த பிரச்சனையிலிருந்து விரைவில் மீண்டு வருவேன் என்று கூறியிருக்கிறார். இவர் உணர்ச்சிவசமாக பேசி இந்த வீடியோவை வெளியிட்டிருந்தாலும் ரசிகர்கள் இவரை நம்புவதற்கு தற்போது தயாராக இல்லை.

அவர் நீலிக்கண்ணீர் வடிப்பதாகவும் சுஷாந்தின் மரணத்திற்குப்பின் இருக்கும் மர்ம முடிச்சுகளை அவிழ்த்து ஆகவேண்டும் என்றும் ரசிகர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்கள். மேலும் இந்த வீடியோவில் ரியா சக்கரவர்த்தி தனக்கு பீகாரில் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அதனால் இந்த கேஸை மும்பை நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இதில் முக்கியமான தகவல் என்னவென்றால் ரியா சக்ரவர்த்தி இந்த கேஸில் தனக்கு வாதாடும் வழக்கறிஞருக்கு சுமார் ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் தந்துள்ளார் என்பதாம். விரைவில் சுஷாந்த் மரணத்தைப் பற்றிய தெளிவான உண்மை, இந்த கேஸிர்க்கு பிறகு வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus