சீரியல் படப்பிடிப்புக்கு அனுமதியளிக்க குஷ்பு கோரிக்கை…!

  • May 5, 2020 / 03:29 PM IST

சீரியல் படப்பிடிப்புகளை உரிய நெறிமுறைகளை பின்பற்றி தொடங்குவதற்கு அரசு அனுமதி தர வேண்டும் என செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் நடிகை குஷ்பு கோரிக்கை வைத்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில், சின்னத்திரை துறை சார்பில் நடிகை குஷ்பு அமைச்சரை சந்தித்துப்பேசினார். தற்போது உள்ள ஊரடங்குச் சூழ்நிலையில் சின்னத்திரை நடிகர் நடிகைகள் ஏராளமானோர் தங்கள் துறை பணிகளைச் செய்ய முடியாத காரணத்தினால் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் எனவே சின்னத்திரை படப்பிடிப்பு நடத்த அனுமதியளிக்க வேண்டும் என்றும் எனவே தமிழக அரசு இதுத்தொடர்பாக நடவடிக்கை எடுத்து உரிய அனுமதியளிக்க வேண்டும் என்றும் அமைச்சரிடம் கேட்டுக் கொண்டுள்ளதாக நடிகை குஷ்பு தெரிவித்தார்.

மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு மேற்கொண்டுள்ள வழிமுறைப்படி சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து குறைவான நபர்கள் வைத்து தங்கள் படபிடிப்புகளை தொடர்வதாகவும் அவர் கூறியிருந்தார். தொலைக்காட்சி சீரியல்களில் கதை கொஞ்சம் மாறக்கூடும் என்றும், ஏனெனில் முன்பை போல் அனைத்து கலைஞர்களையும் வைத்து படப்பிடிப்பு நடத்த முடியாது என்பதால் கதைக்கு தேவையான முக்கிய கதாபாத்திரங்களை மட்டும் வைத்து படபிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில் கேரளாவில் படப்பிடிப்புகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus