இயக்குநராகிறார் பிரபல நடிகரின் மகன்… ஹீரோயின் நம்ம டாப்சியாமே!

  • August 6, 2020 / 01:31 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் டாப்சி பன்னு. 2011-ஆம் ஆண்டு ரிலீஸான ‘ஆடுகளம்’ என்ற படம் தான் டாப்சிக்கு வாய்ப்பு கிடைத்த முதல் தமிழ் படம். ‘ஆடுகளம்’ படம் சூப்பர் ஹிட்டானதும், நடிகை டாப்சிக்கு அடித்தது ஜாக்பாட். அவரின் கால்ஷீட் டைரியில் ‘வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2, கேம் ஓவர்’ என படங்கள் குவிந்தது.

டாப்சி தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்து, அங்கையும் தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி சாதனை படைத்திருக்கிறார். தற்போது, டாப்சி நடிப்பில் தமிழில் ஒரு படமும், ஹிந்தியில் நான்கு படங்களும் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், நடிகை டாப்சி பன்னுவின் கால்ஷீட் டைரியில் ஒரு புதிய படம் இணைந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை பிரபல நடிகரும், இயக்குநருமான ஆர்.சுந்தர்ராஜனின் மகன் தீபக் இயக்கவிருக்கிறார். இவர் இயக்குநர் ஏ.எல்.விஜய்யிடம் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்றவராம். இப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் தயாராகுமாம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus