நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்… வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்த திரையுலக பிரபலங்கள்!

  • February 19, 2022 / 07:14 PM IST

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று (பிப்ரவரி 19-ஆம் தேதி) நடைபெறுவதால் பல திரையுலக பிரபலங்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்து வருகின்றனர். காலையில் முதல் ஆளாக ‘தளபதி’ விஜய் நீலாங்கரை வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தார்.

அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதால், விஜய் தன்னால் ஏற்பட்ட சிரமத்திற்கு அங்குள்ளவர்களிடம் மன்னிப்பு கேட்டார். உச்ச நட்சத்திரமான ஒருவர் இப்படி மன்னிப்பு கேட்டது அவரது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.

‘தளபதி’ விஜய்யை தொடர்ந்து நடிகர்கள் கமல் ஹாசன், அருண் விஜய், எஸ்.வி.சேகர், உதயநிதி ஸ்டாலின், நடிகைகள் குஷ்பூ, ஐஸ்வர்யா ராஜேஷ், லதா ராவ், இயக்குநர்கள் டி.ராஜேந்தர், சீமான், கிருத்திகா உதயநிதி, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், பாடலாசிரியர் வைரமுத்து உள்ளிட்ட பலர் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்துள்ளனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus