பிரபலமானவராக இருப்பதால் இப்படி நடப்பது சகஜம் !

  • December 2, 2022 / 10:33 AM IST

அர்ஜுன் ரெட்டி படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான நடிகர் விஜய் தேவரகொண்டா . இவர் தெலுங்கில் நடிக்கும் படங்கள் எல்லாம் இப்போது மற்ற இந்திய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது . நேரடி தமிழ் படமான நோட்டா படத்தில் இவர் நாயகனாக அறிமுகமானார் . இவர் நடிப்பில் வெளியான லைகர் எதிர்பாராத தோல்வியை அடைந்தது .

லைகர் படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ந் தேதி வெளியானது . பூரி ஜெகன்நாத் இந்த படத்தை இயக்கி இருந்தார் . பூரி ஜெகன்நாத் உடன் இணைந்து நடிகை சார்மி இந்த படத்தை தயாரித்து இருந்தார் . லைகர் படத்தை தயாரிக்க ஹவாலா பணம் முதலீடு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. லைகர் படத்தை தயாரிக்க சந்தேகத்திற்குரிய வழிகளில் தயாரிப்பாளருக்கு பணம் கிடைத்துள்ளதாக, காங்கிரஸ் தலைவர் பக்கா ஜட்சன் புகார் அளித்திருந்தார்.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து இயக்குநர் பூரி ஜெகன்நாத், தயாரிப்பாளர் சர்மி ஆகியோரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியிருந்தனர். இதனை தொடர்ந்து நேற்று படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டாவும் ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜாரானார். அப்போது அவரிடம் அமலாக்கத்துறையினர் 12 மணி நேரம் விசாரணை நடத்தி உள்ளனர் .

விசாரணைக்குப் பின் வெளியே வந்த விஜய் தேவரகொண்டா கூறியதாவது, “பிரபலமானவராக இருப்பதால் சங்கடங்களை எதிர்கொள்ள நேரிடும், சில பிரச்சனைகள் மற்றும் பக்க விளைவுகள் இருக்கும். இது ஒரு அனுபவம், இது தான் வாழ்க்கை. நான் என் கடமையை செய்தேன். நான் இங்கு வந்து அவர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தேன். அவர்கள் என்னை மீண்டும் அழைக்கவில்லை” என்று தெரிவித்தார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus