சிவகுமார் பாணியில் போனை வீசி எறிந்த பிரபல நடிகர் !

  • January 28, 2023 / 07:38 PM IST

இந்தி திரையுலகில் பிரபல நடிகராக திகழ்பவர் ரன்பீர் கபூர். கடந்த வருடம் தனது நீண்ட கால காதலியான பிரபல நடிகை ஆலியா பட்டை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ரன்பீர் கபூர் வெளியேறி உள்ளார். அவரை பார்த்ததும் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். அப்போது, ரன்பீரை பார்க்க வந்த ரசிகர் ஒருவர், அவரை அணுகி தனது மொபைல் போனில் ஒரு செல்பி புகைப்படம் எடுக்க வேண்டும் என கோரியுள்ளார். ரன்பீரும் சரியென சம்மதித்து நின்றுள்ளார். ரசிகர் மொபைல் போனை இயக்க முயற்சித்து உள்ளார். ஆனால், அந்த நேரம் பார்த்து ரசிகரின் போன் உடனடியாக வேலை செய்யவில்லை. இதனால், மீண்டும் போனை இயக்கி பார்த்து உள்ளார்.

இரண்டு முறை இப்படி ஆனபோதும், சுற்றியிருந்தவர்களை அமைதிப்படுத்தி விட்டு புகைப்படத்திற்கு தன்னை ரன்பீர் தயார் படுத்தி கொண்டார். ஆனால், ரசிகரின் செல்பி எடுக்கும் முயற்சி வெற்றி பெறவில்லை. இதனால், சிறிது நேரம் அமைதியுடன் இருந்த ரன்பீர், பொறுமையிழந்து, ரசிகரின் மொபைல் போனை பறித்து, தனக்கு பின்புறம் தரையில் வீசி எறிந்து உள்ளார்.

இதனை பார்த்த உடனிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். ரசிகருக்கும் பேரதிர்ச்சி ஏற்பட்டது. அவரது இந்த கோபத்திற்கு காரணம் என சில ரசிகர்கள் கூறும்போது, குடும்பத்தில் ஏற்பட்ட பாதிப்புகளால், அது அவரது படங்களிலும் கூட தற்போது வெளிப்பட தொடங்கியுள்ளது என்று கூறப்படுகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus