சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு கிடைத்த விடை !

  • November 26, 2022 / 08:58 PM IST

இன்று நேற்று நாளை என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குனர் ரவிக்குமார் .
2015-ஆம் ஆண்டு இந்த படம் வெளியானது .நடிகர் விஷ்ணு விஷால் ,மியா ஜார்ஜ் ஆகியோர் இந்த படத்தில் நடித்து இருந்தனர். ஹிப் ஹாப் தமிழன் ஆதி இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் .இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து அயலான் என்கிற படத்தை எடுத்து முடித்துள்ளார் .

இந்த படத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர் .இந்த படத்திற்கு ஏ.ஆர் .ரஹ்மான் இசையமைத்து உள்ளார் .இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது .தற்பொழுது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது .

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை இஷா கோபிகர் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் அயலான் படத்தை பற்றி பேசி இருந்தார் அதில் ” அயலான் படம் சயின்ஸ் பிக்சன் படம். கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தை இந்த படத்தில் அதிகமாக பயன்படுத்தி உள்ளனர்.மேலும் இந்தியாவில் உருவாகும் முதல் ஏலியன் திரைப்படம் அயலான் என்றும் தெரிவித்து இருந்தார் .


இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்த படத்தை எதிர்பார்த்து காத்திருந்த சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு தற்போது நல்ல செய்தி கிடைத்துள்ளது . அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அயலான் படம் திரைக்கு வர உள்ளது என்று கூறப்படுகிறது . இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus