சூர்யாவுக்கு நன்றி சொன்ன பொதுமக்கள் ! என்ன காரணம் தெரியுமா ?

  • September 29, 2022 / 01:01 AM IST

நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தை இயக்கியவர் இயக்குனர் பாண்டியராஜ். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா ,இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க உள்ள வாடிவாசல் படத்தின் டெஸ்ட் ஷூட் சென்னையில் நடந்தது.இந்த படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ளது . வெற்றிமாறன் சூரி நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார்.அந்த படம் வெளியான பின் வாடிவாசல் படம் முழுவதுமாக தொடங்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் சூர்யா இயக்குனர் பாலா இயக்கத்தில் நடித்து வந்தார் . இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்து முடிந்தது . இந்த படத்திற்கு வணங்கான் என்று தலைப்பு வைத்துள்ளனர் .இந்த படத்தில் நடிகர் சூர்யா இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என்றும் ஒரு வேடத்தில் காது கேளாத மற்றும் வாய் பேசாத நபராக நடிக்கிறார் என்ற செய்திகளும் வெளியாகி இருந்தது .

வணங்கான் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவாவில் விரைவில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது . ஆனால் தற்போது இதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது . பாலா மற்றும் சூர்யா கூட்டணியில் உருவாகும் வணங்கான் படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போகி உள்ளது . இதனால் சூர்யா மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது .

நடிகர் சூர்யா சினிமாவை தவிர சமூகம் சார்ந்த பல பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார் . மேலும் தனது அகரம் அறக்கட்டளை மூலம் பல ஏழை குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார் .அந்த வகையில் புன்னைகாயல் என்கிற கிராமத்தை சேர்ந்த 5 மாணவ மாணவிகள் உயர் கல்வியை தொடர்ந்திட சூர்யாவின் அகரம் அறக்கட்டளை உதவி உள்ளது . இதற்காக சூர்யாவுக்கு நன்றி தெரிவித்து பேனர் வைத்து உள்ளனர் புன்னைக்காயல் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் . தற்போது இந்த பேனர் வைரலாகி வருகிறது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus