ப்ரியாமணியை மிரள வைத்த கதை !

  • November 22, 2022 / 10:14 PM IST

நடிகை பிரியாமணி நடிப்பில் புதிதாக உருவாகி உள்ள படம் ‘DR56’. ஹரி ஹரா பிக்சர்ஸ் பட நிறுவனம் இந்த படத்தை கன்னடம் மற்றும் தமிழில் தயாரித்து உள்ளது . படத்திற்கு திரைக்கதை எழுதி தயாரித்தது , நாயகனாக நடித்து இருக்கிறார் பிரவீன்.

இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது . இதில் கலந்துகொண்ட நாயகி ப்ரியாமணி பேசி இருந்தார் . அதில் ” ‘சாருலதா’ படத்திற்கு பிறகு தமிழில் நான் நடித்து வெளிவரும் படம் என்பதால் நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் . இந்தக் கதையை இயக்குனர் என்னிடம் சொன்னபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் இது நிஜமாக நடந்த நடந்துகொண்டிருக்கும் சம்பவம். இப்படியெல்லாம் நடக்குமா என்று கேட்டபோது, இயக்குனர் சில புகைப்படங்களை என்னிடம் காட்டினார். அதை பார்த்துவிட்டு மிரண்டுபோன நான், நீங்க சொன்ன மாதிரியே இந்த படத்தை எடுத்துட்டா. நிச்சயமா பெரிய வெற்றி பெறும்னு சொன்னேன். நான் எதிர்பார்த்தபடியே படம் நல்லபடியாக வந்து இருக்கிறது என்று கூறினார் .

இந்த கதையில் நான் நடிப்பதற்கு இரண்டு காரணங்கள் இருந்தது. ஒன்று எனக்கு இதில் ரொம்ப ரொம்ப முக்கியமான ரோல் . சிபிஐ அதிகாரியாக நடிக்கிறேன். இன்னொரு காரணம் இந்தப் படத்தில் நாய் ஒன்றும் நடிக்கிறது. எனக்கு விலங்குகள் என்றால் ரொம்பப் பிடிக்கும். அதிலும் நாய் என்றால் ரொம்பவே ப்ரியம். அதனால் கதை கேட்டவுடனேயே ஓகே சொல்லிவிட்டேன் என்று தெரிவித்துள்ளார் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus