மலையாள சினிமாவில் துணை வேடங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அஞ்சலி நாயர். இவர் கோலிவுட் சினிமாவில் நெல்லு, உன்னையே காதலிப்பேன், ரஜினியின் அண்ணாத்த, உள்ளிட்ட மாமனிதன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு அனீஷ் என்கிற இயக்குனரை திருமணம் செய்து விவாகரத்து பெற்ற அஞ்சலி நாயர் கடந்த ஆண்டு அஜித் என்கிற உதவி இயக்குனரை திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் நடிகை அஞ்சலி நாயர் யூடியூப் சேனல் மூலம் சினிமாவில் தான் சந்தித்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர் வருகிறார். அந்த வகையில் சமீபத்திய வீடியோ ஒன்றில், தமிழ் படத்தில் நடித்த போது வில்லன் நடிகர் ஒருவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்ற பகீர் தகவலை பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
படப்பிடிப்பு இல்லாத சமயத்திலும் என்னை வெளியே செல்ல அனுமதிக்காமல் தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்தார். என்னிடம் ப்ரொபோஸ் செய்ததோடு, நான் எங்கு போனாலும் பின் தொடர்ந்து வந்தார். ஒருமுறை ரயிலில் இருந்து தள்ளிவிட்டு கொல்ல முயற்சித்தார். இது தவிர எனது ஹேண்ட் பேக்கை எடுத்துக்கொண்டு சென்ற அவர், தனது வீட்டுக்கு வந்து வாங்கிக்கொள்ளுமாறு அழைத்தார். இப்படி அவர் தொடர்ந்து டார்ச்சர் செய்ததால் காவல்துறையின் உதவியை நாடினேன். இதையடுத்து கேரளாவுக்கே சென்றுவிட்டேன்” என தெரிவித்துள்ளார்