‘டிக் டாக்’ இலக்கியாவின் ‘நீ சுடத்தான் வந்தியா?’ படத்துக்கு ‘ஏ’வா ‘யு/ஏ’ சான்றிதழா?

  • September 30, 2021 / 06:09 PM IST

திரைப்படங்களில் நடித்து ஃபேமஸாவதற்கு முன்பே ‘டிக் டாக்’ மூலம் அதிகம் கவனம் ஈர்த்தவர் இலக்கியா. படு கவர்ச்சியான ‘டிக் டாக்’ வீடியோஸ் மற்றும் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஹாட்டான போட்டோஷூட் ஸ்டில்ஸை ஷேரிட்டு வருவதால் இவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

இந்த ஆண்டு (2021) ஜனவரி மாதம் நிறைவடைந்த ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4-யிலும் இலக்கியா கலந்து கொள்ளவிருக்கிறார் என்று முதலில் சொல்லப்பட்டது. பின், இலக்கியாவே தான் கலந்து கொள்ளவில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தற்போது, இலக்கியா சினிமாவிலும் என்ட்ரியாகியுள்ளார். இவர் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகும் முதல் படம் ‘நீ சுடத்தான் வந்தியா?’. இந்த படத்தை கே.துரைராஜ் என்பவர் இயக்கியுள்ளார்.

இதில் அருண் குமார் என்பவர் ஹீரோவாக நடித்ததுடன், அவரே தனது ‘அல்பைன் மீடியா’ நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 10-ஆம் தேதி இதன் ட்ரெய்லரை ரிலீஸ் செய்தனர். தற்போது, இந்த படத்தை பார்த்த சென்சார் குழுவினர் ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus