‘பிக் பாஸ் 5’யில் கலந்து கொள்வது தொடர்பாக இன்ஸ்டா லைவ்வில் பேசிய ஜி.பி.முத்து!

  • September 9, 2021 / 01:44 PM IST

ஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 18 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கடந்த ஜனவரி மாதம் 17-ஆம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரி டைட்டில் வின்னர் என்றும், பாலாஜி முருகதாஸ் ரன்னர்-அப் என்றும் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் அறிவித்தார். சமீபத்தில், ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 5-க்கான பணிகள் துவங்கப்பட்டது. இந்த சீசன் 5-யில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

இப்போது, சீசன் 5-க்கான ‘பிக் பாஸ்’ வீட்டின் செட்டை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியின் இரண்டு ப்ரோமோ வீடியோக்கள் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியை வருகிற அக்டோபர் மாதத்தில் இருந்து ஆரம்பிக்க விஜய் டிவி ப்ளான் போட்டுள்ளது. இந்நிலையில், ‘டிக் டாக்’ மூலம் ஃபேமஸான ஜி.பி.முத்து இன்ஸ்டா லைவ்வில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார். அப்போது ஒரு ரசிகர் “பிக் பாஸ் போவீங்களா?” என்று கேள்வி கேட்டிருந்தார். அதற்கு ஜி.பி.முத்து “என்னால ஒரு நாள் கூட மொபைல் இல்லாமல் இருக்க முடியாது. அதுமட்டுமில்லாம, என்னால என் மனைவி மற்றும் பிள்ளைகளை பார்க்காமல் இருக்க முடியாது” என்று கூறியுள்ளார்.

 

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus