சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்காக ‘டாக்டர்’ அப்டேட் கொடுத்த திருப்பூர் மாவட்ட ஆட்சியர்!

  • March 13, 2021 / 02:50 PM IST

டிவி டு சினிமா வந்து சில ஆண்டுகளிலேயே முன்னணி ஹீரோக்களின் லிஸ்டில் இடம் பிடித்து மாஸ் காட்டியவர் சிவகார்த்திகேயன். ‘மெரினா, 3, மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல்’ ஆகிய படங்களில் தனக்கு கிடைத்த நடிக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார் சிவகார்த்திகேயன்.

இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. இப்போது, சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டாக்டர்’, ‘அயலான்’ மற்றும் ‘டான்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் இயக்குநர் நெல்சன் இயக்கி வரும் ‘டாக்டர்’ படத்தில் சிவாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் என்பவர் நடித்து கொண்டிருக்கிறார். சமீபத்தில், இதன் படப்பிடிப்பு முடிந்தது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது.

சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் பல மாதங்களாக இப்படத்தின் ரிலீஸுக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்கள். சமீபத்தில், இந்த படத்தை வருகிற ரம்ஜான் ஸ்பெஷலாக திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக சிவகார்த்திகேயனே ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தற்போது, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் ட்விட்டரில் “டாக்டர் அப்டேட் மக்களே” என்று குறிப்பிட்டு ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளார். அப்போஸ்டரில் “வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் அன்று முகக்கவசம் அணிந்து வாக்களிக்க வாருங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus