‘சூப்பர் ஹீரோ’ கதையில் நடிக்க மறுத்த ‘தளபதி’ விஜய்… அவருக்கு பதில் யார் நடிக்கப்போறாங்க தெரியுமா?

  • December 4, 2021 / 02:11 PM IST

2012-ஆம் ஆண்டு ‘அட்டகத்தி’ என்ற சின்ன பட்ஜெட் படத்தை இயக்கி ஹிட் கொடுத்தவர் பா.இரஞ்சித். அந்த படத்தின் வெற்றியால் இயக்குநர் பா.இரஞ்சித்திற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து கார்த்தியுடன் ‘மெட்ராஸ்’, ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துடன் ‘கபாலி, காலா’ என கூட்டணி அமைத்து சூப்பரான படங்களை கொடுத்தார்.

சமீபத்தில், பா.இரஞ்சித் இயக்கிய புதிய படமான ‘சார்பட்டா பரம்பரை’ OTT-யில் ரிலீஸாகி சூப்பர் ஹிட்டானது. இதில் ஹீரோவாக ஆர்யாவும், ஹீரோயினாக துஷாராவும் நடித்திருந்தனர். ஏற்கனவே, முன்னணி ஹீரோவான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தை வைத்து இரண்டு படங்களை இயக்கிய இயக்குநர் பா.இரஞ்சித், இன்னொரு முன்னணி ஹீரோவான ‘தளபதி’ விஜய்யை வைத்து படம் இயக்குவது தொடர்பாக மீடியாவுக்கு கொடுத்திருந்த ஒரு பேட்டியில் “ரஜினியின் ‘காலா’ படத்துக்கு பிறகே நடிகர் விஜய் சாரை மீட் பண்ணி ஒரு ‘சூப்பர் ஹீரோ’ கதையை சொல்லியிருந்தேன். சாரும் அக்கதை சூப்பராக இருக்கிறது என்று சொன்னார்” என்று கூறியிருந்தார்.

தற்போது, இந்த ‘சூப்பர் ஹீரோ’ கதையை தான் நடிகர் விக்ரமிடமும் சொல்லி கமிட் செய்திருக்கிறாராம் பா.இரஞ்சித். ஆகையால், விஜய் இதில் நடிக்க நோ சொன்னதால் தான் பா,இரஞ்சித் இம்முடிவை எடுத்து விட்டார் என்று சொல்லப்படுகிறது. விக்ரம் – பா.இரஞ்சித் இணையும் படத்துக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி வந்தது. இதனை ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்க உள்ளாராம். இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம். மிக விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus