“ஏ.ஆர்.ரஹ்மான் யாரென்று எனக்கு தெரியாது”ன்னு சொன்ன முன்னணி தெலுங்கு ஹீரோ… கொந்தளித்த ரசிகர்கள்!

  • July 22, 2021 / 07:14 PM IST

சினிமாவில் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் ஏ.ஆர்.ரஹ்மான். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த முதல் படத்தின் ஆல்பமே மெகா ஹிட்டானது. அந்த படம் தான் ‘ரோஜா’. இந்த படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கியிருந்தார். ‘ரோஜா’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து பல படங்களுக்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தமானார். தமிழ் மொழி மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மானின் பல பாடல்கள் ரசிகர்களின் ப்ளேலிஸ்டில் உள்ளது. ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்துக்காக இரண்டு ஆஸ்கார் விருதுகளை ஏ.ஆர்.ரஹ்மான் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

இப்போது ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இயக்குநர் மணிரத்னமின் ‘பொன்னியின் செல்வன்’ (தமிழ்), நடிகர் விகரமின் ‘கோப்ரா’ (தமிழ்), நடிகர் தனுஷின் ‘அட்ராங்கி ரே’ (ஹிந்தி), நடிகர் சிலம்பரசனின் ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ (தமிழ்) என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், தெலுங்கில் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான பாலகிருஷ்ணா கொடுத்துள்ள ஒரு பேட்டியில் “இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் விருது வாங்கியிருக்கலாம். ஆனால், அவர் யாரென்றே எனக்கு தெரியாது” என்று கூறியுள்ளார். இதனால் கொந்தளித்த ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பாலகிருஷ்ணாவை திட்டி ஸ்டேட்டஸ் போட்ட வண்ணமுள்ளனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus