Trisha : அதிமுக பிரமுகர் கொடுத்த சர்ச்சை பேட்டி… அவருக்கு பதிலடி கொடுத்த நடிகை த்ரிஷா!

  • February 21, 2024 / 10:23 AM IST

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் த்ரிஷா. ஆரம்பத்தில் ‘ஜோடி’ படத்தில் கெஸ்ட் ரோலில் மட்டுமே வந்து சென்றார். அதன் பிறகு ‘மௌனம் பேசியதே’ படத்தில் ஹீரோயினாக அவதாரம் எடுத்தார் த்ரிஷா. இதில் ‘சந்தியா’ என்ற கதாபாத்திரமாக வலம் வந்து ரசிகர்களின் லைக்ஸை குவித்தார்.

‘மௌனம் பேசியதே’ ஹிட்டிற்கு பிறகு த்ரிஷாவிற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘மனசெல்லாம், சாமி, லேசா லேசா, எனக்கு 20 உனக்கு 18, கில்லி, ஆய்த எழுத்து, திருப்பாச்சி, உனக்கும் எனக்கும், அபியும் நானும், விண்ணைத்தாண்டி வருவாயா, 96, பேட்ட, பரமபதம் விளையாட்டு, ராங்கி, பொன்னியின் செல்வன் 1 & 2, தி ரோட், லியோ’ என படங்கள் குவிந்தது.

தமிழ் மொழி மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார் த்ரிஷா. இப்போது இவர் நடிப்பில் ‘கர்ஜனை, ராம், சதுரங்க வேட்டை 2, ஐடென்டிட்டி, விடாமுயற்சி’ என 5 படங்களும், ‘பிருந்தா’ என்ற வெப் சீரிஸும் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சேலம் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு கொடுத்துள்ள பேட்டியில் “2017-ல் கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏக்கள் நடிகைகளுடன் உல்லாசமாக இருந்தார்கள்” என்றும் குறிப்பாக “நடிகை த்ரிஷாவை தான் அதிமுக எம்.எல்.ஏ வெங்கடாச்சலம் கேட்டார்.

அவரை நடிகர் கருணாஸ் தான் பேசி அழைத்து வந்தார். இதற்காக த்ரிஷாவுக்கு ரூ.25 லட்சம் கொடுக்கப்பட்டது” என்றும் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது, நடிகை த்ரிஷா தனது எக்ஸ் தளத்தில் தன்னை பற்றி அவதூறாக பேசிய ஏ.வி.ராஜு மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிவிட்டுள்ளார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus