“பொன்னியின் செல்வன்” திரைப்படத்திற்காக தன்னை தயார் படுத்திய நடிகை திரிஷா!

  • November 16, 2020 / 02:37 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மணிரத்தினம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் “பொன்னியின் செல்வன்”.

இந்த படத்தை மணிரத்னம் மற்றும் லைகா புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கிறார்கள். ஏற்கனவே தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் நடிகர் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் பச்சன், சரத்குமார், ஐஸ்வர்யா லட்சுமி, நிழல்கள் ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

மணிரத்தினம் இயக்கத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே இணையும் இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்று ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், வருகிற நவம்பர் இரண்டாம் வாரத்திலிருந்து இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்று தற்போது தகவல் வந்துள்ளது.

மேலும் இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகை திரிஷா குதிரை சவாரி செய்வதற்காக பயிற்சி எடுத்து வந்ததாகவும் அதன் பயிற்சி தற்போது முடிவடைந்துள்ளதாகவும் அவர் வெளியிட்டுள்ளார். இதனால் நடிகை திரிஷா “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் நடிப்பதற்கு தயாராக இருக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus