த்ரிஷாவுடன் செல்ஃபி எடுத்த ஐஸ்வர்யா ! வைரலாகும் பதிவு !!

  • September 23, 2022 / 10:41 AM IST

இந்திய சினிமாவின் முக்கியமான தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் செக்க சிவந்த வானம் . இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம்
பொன்னியின் செல்வன் படத்தை இயக்க போவதாக அறிவித்தார் . கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற நாவலை தழுவி இந்த படம் உருவாகியுள்ளது .

இந்த படத்தில் விக்ரம் ,கார்த்தி ,ஜெயம் ரவி , ஐஸ்வர்யா ராய்,த்ரிஷா என பல சினிமா நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் . இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளது . இந்த படத்திற்கு A.R.ரகுமான் இசையமைத்து உள்ளார் . தமிழ் ரசிகர்கள் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது .

இந்நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் படக்குழு படத்தின் விளம்பர படுத்தும் பணிகளை துவங்கி உள்ளது அந்த வகையில் பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் விக்ரம் ,கார்த்தி ,த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் சரத்குமார் , பார்த்திபன் ஆகியோரின் ஸ்டில்ஸை வெளியீட்டு இருந்தனர் .அதனை தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு , பிரபு , பிரகாஷ் ராஜ் , லால் , ஆகியோரின் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தி புகைப்படத்தை வெளியிட்டு இருந்தனர் . படத்தின் ட்ரைலர் வந்த பிறகு பொன்னியின் செல்வன் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது .

 


இந்நிலையில் பொன்னியின் செல்வன் படக்குழு தற்போது படத்தை விளம்பரப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் சென்னை , கேரளா ,கர்நாடகா , மும்பை டெல்லி என்று அடுத்து அடுத்து தொடர் பயணங்கள் செய்து வருகின்றனர் . இந்நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் முக்கியமான கதாபாத்திரமான குந்தவை பாத்திரத்தில் நடித்து இருக்கும் த்ரிஷா இன்ஸ்டாவில் நடிகை ஐஸ்வர்யா ராய் அவர்களுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார் . தற்போது அந்த புகைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus