மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்காக த்ரிஷா வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

  • October 1, 2022 / 10:55 AM IST

சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் மணிரத்னம். இப்போது இவர் இயக்கியிருக்கும் பிரம்மாண்டமான படம் ‘பொன்னியின் செல்வன்’.

இந்த படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், ‘ஜெயம்’ ரவி, கார்த்தி, த்ரிஷா, விக்ரம் பிரபு, ஜெயராம், பிரபு, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், ரகுமான், கிஷோர், அஷ்வின், ரியாஸ் கான், லால் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

இப்படத்திற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதனை அதிக பொருட்செலவில் ‘மெட்ராஸ் டாக்கீஸ் – லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.

இந்த படத்தின் முதல் பாகம் (PS – 1) இன்று (செப்டம்பர் 30-ஆம் தேதி) திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் ரிலீஸாகியுள்ளது. இந்நிலையில், இப்படத்திற்காக நடிகை த்ரிஷா ரூ.2 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus