துக்ளக் தர்பார் படத்தின் கதை இதுதான் – விஜய் சேதுபதி!

  • July 10, 2020 / 12:09 PM IST

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் “துக்ளக் தர்பார்”. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி அவரது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

இந்த படத்தை அறிமுக இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கியுள்ளார். இந்த படத்தின் கதை குறித்து விஜய் சேதுபதி தற்போது கூறியுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி ‘சிங்கம்’ எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிங்கம் ஒரு நேர்மையில்லாத ஃபிராட்டாக எந்த நல்ல செயலும் செய்யாமல் இருப்பான், அதிலிருந்து அவன் எப்படி அரசியலில் சேர்கிறான், பிறகு எப்படி நல்லவனாக மாறுகிறான் என்பது தான் கதைக்களமாம். மேலும் இந்த படத்தில் இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் ராதாகிருஷ்ணன் வில்லனாக நடித்துள்ளாராம்.

நடிகை மஞ்சிமா மோகன் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு சகோதரியாகவும் நடிகை அதிதி ராவ் ஹைடாரி ஜோடியாகவும் நடித்துள்ளார்கள். மேலும் இந்த படத்தில் நடிகை காயத்ரி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.

கோவிந்த் வசந்தா இசையமைப்பில் இந்த படத்தின் காட்சிகளை மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.

விஜய்சேதுபதி கடைசியாக விஜய்சந்தர் இயக்கத்தில் “சங்கத்தமிழன்” படத்தில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் “மாஸ்டர்” திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இந்தப் படம் வருகிற தீபாவளி அன்றோ அல்லது 2021 பொங்கல் அன்றோ வெளியிடப்படும் என்று திரைப்படக் குழு தெரிவித்துள்ளது. துக்ளக் தர்பார் திரைப்படம் எப்போது வெளிவரும் என்று விஜய்சேதுபதி ரசிகர்கள் தற்போது ஆவலாக காத்திருக்கிறார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus