மீண்டும் ஒரு நட்சத்திர நடிகரின் படத்தை கைப்பற்றிய உதயநிதி !

  • June 21, 2022 / 11:12 AM IST

2002-ஆம் வெளியான தமிழ் படத்தை இயக்கி கோலிவுட்டிற்கு அறிமுகமானவர் இயக்குனர் ஹரி . இதன் பிறகு சாமி , கோவில் , அருள் ,ஐயா , அருள், தாமிரபரணி , வேல் ,சிங்கம் , என பல படங்களை இயக்கியவர் ஹரி . இவர் நடிகர் சூர்யாவை வைத்து ஆறு , வேல் ,சிங்கம் , சிங்கம் 2 , சிங்கம் 3 என ஐந்து படங்கள் இயக்கி உள்ளார் . இந்த ஐந்து படங்களும் மிக பெரிய வெற்றிகளை குவித்தது .

இந்நிலையில் நடிகர் சூர்யாவை வைத்து இயக்குனர் ஹரி ஆறாவதாக ஒரு படம் இயக்க இருந்தார் ஆனால் ஏதோ சில காரணங்களால் அந்த படம் தொடங்காமல் போனது . இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா ஜெய் பீம் படத்தில் நடித்தார் . இயக்குனர் ஹரி நடிகர் அருண் விஜய்யை வைத்து படம் இயக்க தொடங்கினார் .

யானை என்ற தலைப்பை இந்த படத்திற்கு பெயர் வைத்தார் ஹரி. இந்த படத்தில் நடிகை ப்ரியா பவானி ஷங்கர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து இருக்கிறார் . ராதிகா சரத்குமார், சமுத்திரக்கனி, யோகி பாபு , ஆகியோர் இந்த படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர் .

இந்த படத்தின் பாடல் , டீசர் , ட்ரைலர் என அனைத்தும் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் ‘யானை’ படத்தின் தமிழ்நாட்டின் விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலின் வாங்கி உள்ளார் என்ற செய்தி வெளியாகி உள்ளது . உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே தமிழில் வெளியான விக்ரம் , காத்து வாக்குல ரெண்டு காதல் , பீஸ்ட் , எதற்கும் துணிந்தவன் போன்ற பெரிய படங்களை தொடர்ந்து வாங்கி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus