சினிமாவை விட்டு விலகிய உதயநிதி !

  • December 15, 2022 / 12:35 AM IST

நடிகர் , தயாரிப்பாளர் , அரசியல்வாதி என தன்னை பல துறைகளில் ஈடுபடுத்திக் கொண்டவர் உதயநிதி ஸ்டாலின் . 2008 ஆம் ஆண்டு முதன் முதலாக ரெட் ஜெயிண்ட் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினர். அந்த மூலம் குருவி , ஆதவன், மன்மதன் அம்பு , 7ஆம் அறிவு உள்ளிட்ட படங்களை தயாரித்தார் .

அதன் பிறகு 2012-ஆம் வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி என்கிற படம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார் . இந்த படத்தில் சந்தானத்துடன் இவர் இணைந்து செய்த நகைச்சுவை காட்சிகள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது . அதன் பிறகு இது கதிர்வேலன் காதல் , நண்பேன்டா ஆகிய படங்களில் நடித்து இருந்தார் .ஆனால் அந்த படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை . மனிதன் மற்றும் சைக்கோ ஆகிய இரண்டு படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன .

இந்நிலையில் நெஞ்சுக்கு நீதி என்கிற படம் இவர் நடிப்பில் வெளியாகி இருந்தது . இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கி இருந்தார் . இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது . சமீபத்தில் உதயநிதி நடிப்பில் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் கலகத் தலைவன் படம் வெளியானது . இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது . இந்த படத்தை தொடர்ந்து உதயநிதி இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் என்கிற படத்திலும் நடித்துள்ளார் .

இந்த படத்தின் கட்டப் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து உள்ளது . இந்நிலையில் அமைச்சர் பதவியில் பொறுப்பேற்று இருக்கும் உதயநிதி அரசியலில் முழு கவனத்தையும் செலுத்த உள்ள காரணத்தினால் இனிமேல் படங்களில் நடிக்க மாட்டேன் இன்று தெரிவித்துள்ளார். மேலும் கமல் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க இருந்ததாகவும் அதிலிருந்து தற்போது விலகி உள்ளதாகவும் கூறி உள்ளார் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus