வெளிவராத ஆயிரத்தில் ஒருவன் படப்பிடிப்பு புகைப்படம்!

  • July 5, 2020 / 10:22 AM IST

2010ஆம் வருடம் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “ஆயிரத்தில் ஒருவன்”. இந்த படம் வித்தியாசமான கதை மற்றும் மாறுபட்ட காட்சிகளுக்காக பெரிய அளவில் மக்களிடையே பேசப்பட்டது.

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் இந்தப் படத்தின் பின்னணி இசையும் பாடல்களும் ரசிகர்களை பிரமிக்க செய்தது. இந்த படத்தில் கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா ஜெரெமையா, பார்த்திபன் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தார்கள்.

ட்ரீம் வேலி கார்ப்பரேஷன் இந்த படத்தை தயாரித்திருந்தார்கள். ராம்ஜி ஒளிப்பதிவில் இந்தப் படத்தின் காட்சிகள் பார்ப்பவரை பிரமிக்க வைத்தது. கொல பாஸ்கர் இந்த படத்திற்கு எடிட்டிங் செய்திருந்தார். சோழ பாண்டியர் காலத்தில் நடக்கும் அரசியல் குறித்தும் இரு சாராருக்கும் இருந்த பிரச்சினை குறித்தும் கதைகரு அமைந்திருந்தது.

இந்த படம் வெளிவந்து சுமார் பத்து வருடங்கள் ஆன பின்பும் இந்த படத்தின் தாக்கம் இருக்கதான் செய்கிறது.

இந்த படம் வெளிவந்த புதிதில் இதற்கான சரியான வரவேற்பும் பாராட்டுகளும் மக்களிடையே கிடைக்கப் பெறாத நிலையில், சமீபத்தில் இந்த படம் ரீரிலீஸ் செய்யப்பட்டு அதற்கான தகுந்த வரவேற்ப்பை பெற்றது.

இந்தப்படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அந்த படத்தில் நடித்த நடிகை ரீமாசென் ட்விட்டரில் வெளியிட்டார். சில மணி நேரங்களிலேயே அந்த புகைப்படம் வைரலாக பரவியது. சில படங்கள் காலங்கள் கடந்து தான் மக்களால் அங்கீகரிக்கப்படும், அந்த பட வரிசையில் ஆயிரத்தில் ஒருவன் நீக்க முடியாத ஒன்று!

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus