யார் சூழ்ச்சி செய்தார்கள் ?

  • December 17, 2022 / 07:41 PM IST

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிகப்பெரிய நிகழ்ச்சி பிக் பாஸ் . இதுவரை 5 சீசன் நடந்து முடிந்துள்ளது . இந்நிலையில் பிக்பாஸ் 6-வது சீசன் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

இந்நிலையில் 60 நாள் கடந்து போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இந்த வார கேப்டன் பதவிக்கு மைனா, ரட்சிதா , அமுதவாணன் போட்டி போட்டனர் . போட்டியில் மைனா வென்று பிக் பாஸ் வீட்டில் மூன்றாவது முறையாக கேப்டன் ஆகி உள்ளார் . இதனால் இந்த வார நாமினேஷனில் அவர் பெயர் இடம்பெறவில்லை .

இது ஒரு பக்கம் இருக்க இந்த நாமினேஷன் லிஸ்டில் மணிகண்டன் , விக்ரமன் , ஜனனி , ஏ.டி.கே , அஸிம் ,ரட்சித்தா ஆகியோர் தேர்வாகி உள்ளனர் . இதனால் இந்த வாரம் வீட்டில் இருந்து யார் வெளியேற்றப்படுவார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து இருந்தது .

மேலும் இந்த வாரம் சொர்க்கவாசி மற்றும் நரகவாசி டாஸ்க் விறுவிறுப்பாக நடந்து முடிந்து உள்ளது . இதன்மூலம் ஜனனி , அமுதவாணன் , ஏடி கே , மணிகண்டன் ஆகிய நால்வரும் நாமினேஷன் ஃபிரீ பாசை வென்றுள்ளனர் .

இந்நிலையில் இன்று வெளியாகி உள்ள முதல் ப்ரோமோவில் நடிகர் கமல் சிலர் உண்மையாக விளையாடி நரகத்தில் இருக்கிறார்கள் என்றும் சில நேரங்களில் சூழ்ச்சி நேர்மையை வீழ்த்தி விடுகிறது ஆனால் சூழ்ச்சி எது நேர்மை எதுன்னு பிரித்து பார்க்க வேண்டியது நம்ம கடமை இல்லையா என்று கமல் பேசியுள்ளார் . எனவே இந்து ஒளிப்பரப்பு ஆக உள்ள எபிசோடில் விறுவிறுப்பாக இருக்கும் என்று நம்பலாம் .

Read Today's Latest Ott Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus