ஜல்லிக்கட்டு வீரர்களுடன் நடிகர் சூர்யா ?

  • May 23, 2022 / 05:13 PM IST

நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தை இயக்கியவர் இயக்குனர் பாண்டியராஜ். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருந்தது.

இந்த நிலையில் நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்து முடிந்துள்ளது . இந்த படத்தில் நடிகர் சூர்யா இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என்றும் ஒரு வேடத்தில் காது கேளாத மற்றும் வாய் பேசாத நபராக நடிக்கிறார் என்ற செய்திகளும் வெளியாகின. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு
கோவாவில் நடக்க இருக்கிறது .

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா ,இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க உள்ள வாடிவாசல் படத்தின் டெஸ்ட் ஷூட் சென்னையில் சில மாதங்களுக்கு முன் நடந்தது. தற்போது விருது வழங்கும் விழாவில் பேசிய இயக்குனர் வெற்றிமாறன் தற்பொழுது நடிகர் சூர்யா இரண்டு ஜல்லிக்கட்டு மாடுகளை வாங்கி அதனுடன் பயின்று வருகிறார் மேலும் ஜல்லிக்கட்டு வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் என்ற தகவலையும் தெரிவித்துள்ளார் .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus