அடுத்து அடுத்து படங்களில் நடிக்கும் வடிவேலு !

  • April 15, 2022 / 07:56 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்தவர் நடிகர் வடிவேலு. நீண்ட நாட்களாக படங்களில் நடிக்காமல் இருந்த நடிகர் வடிவேலு . இந்நிலையில் நடிகர் வடிவேலு தற்பொழுது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி உள்ளார் . இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்திற்கு முதலில் நாய் சேகர் என்று பெயர் வைப்பதாக இருந்தது ஆனால் நடிகர் சதீஷ் கதாநாயகனாக நடித்த படத்திற்கு ஏற்கனவே அந்த பெயரை வைத்ததால் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்று மாற்றி விட்டனர்.

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் படத்தில் வடிவேலு கதாநாயகனாக நடிக்கிறார் .ஷிவாங்கி மற்றும் ஷிவானி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர் . இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது.
இந்த படத்தின் பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து ஒரு முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் . இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

இதனை தொடர்ந்து இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் முழு நீள நகைச்சுவை படம் ஒன்றை இயக்க போவதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது .மேலும் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ள தலைவர் 169 படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது .இதனால் தமிழ் சினிமாவில் மீண்டும் வடிவேலு அடுத்து அடுத்து நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது .கவுதம் படத்தில் வடிவேலு நடிக்கிறாரா?

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus