“இது கடவுள் வைத்த டெஸ்ட்!” லாக்டவுன் குறித்து வைகைபுயல் வடிவேலு

  • April 29, 2020 / 09:18 AM IST

கொரோனா வைரஸ் காரணமாக திரையுலக நட்சத்திரங்களும், பிரபலங்களும் கொரோனா சம்மந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் வைகைப்புயல் வடிவேலுவும் அவ்வப்போது விழிப்புணர்வு வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். தற்பொழுது அவர் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் அவர் “போலீஸ் நம்மளை வேண்டுமென்றே அடிப்பதில்லை. நம்முடைய நலனுக்காகவே அடிக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.

மேலும் “என்னமோ நடக்குதுங்க. கடவுள் இறங்கிட்டான். ஏதோ கடவுள் எல்லோரையும் சோதிக்கிறான். இந்த சோதனையில எல்லோரும் பாஸாகிடணும். கொஞ்ச வேதனையாத் தான் இருக்கும். இந்த சோதனையில நமக்கு பரீட்சை வச்சிருக்கான். அத ஜெயிக்க மனித இனமெல்லாம் ஒன்னு சேரணும்.

போலீஸ் வந்து வேணும்னு அடிக்கல. யாராவது வெளியே வந்தால் என்ன காரணம்னு கேட்பாங்க. சரியான காரணம் சொன்னா விட்ருவாங்க. அது எதுக்குனா நம்ம உயிரை காப்பாத்த தான் போலீஸ் அவங்க உயிரை பணயம் வச்சு வேலை பார்க்கிறாங்க. ஒருசிலர் போலீஸ் அடியில் இருந்து தப்பிக்க முதுகில் தட்டை மறைத்து வைத்து வருகின்றனர். இதுபோன்ற காமெடிகள் எல்லாம் இனியும் செல்லாது தற்போது போலீசார் சுதாரிப்பாக இருக்கிறார்கள்’ என்று தனது கலகலப்பான பாணியில் வைகைப்புயல் வடிவேலு கூறியுள்ளார்.

ரொம்ப காலமாக பெரிய திரையில் வடிவேலுவை மிஸ் செய்த ரசிகர்களுக்கு அவர் இப்பொழுது டிவிட்டரில் ஆக்ட்டிவாக இருப்பது பெரும் சந்தோசத்தை அளித்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus