மீண்டும் ஹீரோவாக உருவெடுக்கப்போகும் வடிவேலு?

  • July 15, 2020 / 06:43 PM IST

தமிழ்சினிமாவில் தன் சிறப்பான காமெடி மூலம் ரசிகர்களிடத்தில் நீங்காத இடத்தைப் பிடித்திருப்பவர் வைகைப்புயல் வடிவேலு. இன்றும்கூட மீம் கிரியேட்டர்ஸர்களுக்கு தேவையான புகைப்படங்களை வடிவேலு காமெடிகளில் தான் எடுக்கிறார்கள்.

1991 ஆம் ஆண்டு கஸ்தூரி ராஜா இயக்கத்தில் வெளியான “என் ராசாவின் மனசிலே”படத்தில் ராஜ்கிரண் சிபாரிசில் அறிமுகமான வடிவேலு, கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான “மெர்சல்” படத்தில் நடித்திருந்தார், இதையடுத்து தற்போது சுராஜ் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

இவர் இதற்கு முன்னர் சிம்புதேவன் இயக்கத்தில் வெளியான “இம்சை அரசன் 23ஆம் புலிகேசி” திரைப்படத்தில் முதன்முதலில் ஹீரோவாக நடித்திருந்தார். அதுமட்டுமின்றி 3 வேறு படங்களிலும் ஹீரோவாக நடித்திருந்தார்.

இதற்கு முன்னர் சுராஜ் இயக்கத்தில் தலைநகரம், மருதமலை, கத்தி சண்டை ஆகிய படங்களில் காமெடி நடிகராக வடிவேலு நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வடிவேலு இனிமேல் ஹீரோவாக நடிக்கமாட்டேன் என்று ஏற்கனவே ஒரு நேர்காணலில் கூறியிருந்தாலும், இந்த படத்தில் அவர் ஹீரோவாக நடிக்கவுள்ளார் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

இதுமட்டுமின்றி கமல்ஹாசனின் “தலைவன் இருக்கின்றான்” படத்தில் வடிவேலு நடிக்கவுள்ளார் என்ற செய்தி ஏற்கனவே வெளியானது. மேலும் சிம்பு நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் அடுத்து வெளிவரவிருக்கும் ஒரு படத்திலும் நடிப்பதற்கு வடிவேலு ஒப்பந்தமாகியுள்ளாராம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus