மறைந்த பாடகர் SPB குறித்த வைரமுத்துவின் இரங்கல் கவிதை!

  • September 26, 2020 / 09:24 AM IST

தமிழ் சினிமாவில் சிறந்த பாடகர்களில் ஒருவராக விளங்கிய எஸ் பி பாலசுப்ரமணியம் செப்டம்பர் 25ஆம் தேதி உடல் நிலை சரியில்லாமல் காலமானார்.

இவர் இழப்பால் தமிழ் சினிமா அதிர்ச்சி அடைந்துள்ளது. பல சினிமா பிரபலங்களும் அவரது ரசிகர்களும் தங்களது இரங்கலை இணையதளம் மூலம் தெரிவித்து வருகிறார்கள். இணையத்தில் எங்கு திரும்பினாலும் இவர் குரலில் வந்த பாடல்கள் ஒலிக்கிறது.

இறந்தாலும் என்றும் தன் இசையால் அனைவரிடமும் இருக்கும் எஸ் பி பாலசுப்ரமணியம் குறித்து பிரபல கவிஞர் வைரமுத்து இரங்கல் கவிதை ஒன்றை எழுதி இருக்கிறார்.

கவிஞர் வைரமுத்து குறிப்பிட்டுள்ளதாவது, ஆயிரம் காதல் கவிதைகளைப் பாடிய உனக்கு கண்ணீர் கவிதை வடிக்க வைத்து விட்டதே காலம்; இசையை இழந்த மொழியாய் அழுகிறேன் என்று தன் கவிதை மூலம் இரங்கலை தெரிவித்துள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus