தொடரும் வணங்கான் பட சர்ச்சை !

  • July 15, 2022 / 01:28 AM IST

நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தை இயக்கியவர் இயக்குனர் பாண்டியராஜ். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா ,இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க உள்ள வாடிவாசல் படத்தின் டெஸ்ட் ஷூட் சென்னையில் நடந்தது. வெற்றிமாறன் சூரி நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார்.அந்த படம் வெளியான பின் வாடிவாசல் படம் முழுவதுமாக தொடங்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்து முடிந்தது . படத்திற்கு வணங்கான் என்று தலைப்பு வைத்துள்ளனர் .இந்த படத்தில் நடிகர் சூர்யா இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என்றும் ஒரு வேடத்தில் காது கேளாத மற்றும் வாய் பேசாத நபராக நடிக்கிறார் என்ற செய்திகளும் வெளியாகி இருந்தது .

இந்நிலையில் படத்தின் இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவே இல்லை . இதனால் படத்தில் பணிபுரியும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு மற்ற புதிய படத்தில் ஒப்பந்தமாக முடியவில்லை . இதனால் நிறைய வாய்ப்புகளை தவற விட்டு வருகின்றனர் . அந்த வகையில் வணங்கான் படத்தின் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் இந்த விவரத்தை இயக்குனர் பாலா மற்றும் நடிகர் சூர்யாவிடம் சொல்லிவிட்டு படத்திலிருந்து விலகிவிட்டார் என்ற செய்தி வெளியாகியுள்ளது . வணங்கான் படம் தொடங்க இன்னும் 2 மாதங்கள் ஆகும் என்று நம்பப்படுகிறது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus