என்னுடன் புகைப்படத்தில் இருந்தவர் இவர்தான்- வனிதா விளக்கம்!

  • July 24, 2020 / 09:34 PM IST

சமீபத்தில் இணையதளம் முழுவதும் எங்கு திரும்பினாலும் வனிதா விஜயகுமார் மற்றும் பீட்டர் பால் திருமணம் மற்றும் அதன் தொடர்பான பிரச்சினைகள் பற்றித்தான் பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வனிதா விஜயகுமாரை லக்ஷ்மி ராமகிருஷ்ணன், கஸ்தூரி தயாரிப்பாளர் ரவீந்தர், சூர்யா தேவி என்று பலரும் கடுமையாக விமர்சித்து பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வனிதா விஜயகுமார் பதிவுகளை வெளியிட்டும் வீடியோக்களை வெளியிட்டும் வந்தார். இருந்தாலும் இவர்கள் தொடர்ந்து இவரை விமர்சித்து வந்ததால் இவர்கள் மீது தற்போது வனிதா விஜயகுமார் போலீசில் புகார் அளித்துள்ளார்.

ஏற்கனவே சூர்யா தேவி மீது வனிதா புகார் கொடுத்ததையடுத்து அவரை கைது செய்து, தற்போது அவர் ஜாமீனில் வெளிவந்துள்ளார். சூர்யா தேவியை ஜாமீனில் எடுப்பதற்கும் நடிகை கஸ்தூரி உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி பல இன்னல்களுக்கு நடுவில் வனிதா விஜயகுமாருடன் ஒரு ஆண் நெருக்கமாக அமர்ந்து கையில் கோப்பை வைத்திருக்கும் ஒரு புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வந்தது.

இதைப் பற்றி தற்போது விளக்கம் அளித்துள்ள வனிதா அந்த புகைப்படத்தில் தன்னுடன் அமர்ந்திருப்பது தன்னுடைய நெருங்கிய நண்பர் என்றும், அவர்களுக்கு அருகில் அந்த ஆண் நண்பரின் மனைவியும் அமர்ந்திருந்ததாகவும், அதை புகைப்படம் வெளியிட்டவர் கிராப் செய்து விட்டார் என்றும் கூறியுள்ளார்.

அப்படி அவர் அருகில் மனைவி இல்லாவிட்டாலும் தன் நண்பருடன் அப்படி அமர்வதற்கு அவருக்கு அனைத்து உரிமையும் இருப்பதாகவும் கூறியிருக்கிறார். அதுமட்டுமின்றி தனக்கு பெண்களை விட ஆண்கள் மேல் நம்பிக்கை அதிகம் என்றும், தனக்கு அதிக ஆண் நண்பர்கள் இருக்கிறார்கள் என்றும் ஏற்கனவே வனிதா பலமுறை குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி தனது தந்தை விஜயகுமார், சகோதரர் அருண் விஜய், மற்றும் சகோதரிகள் ப்ரீத்தி, ஸ்ரீதேவி ஆகியோரை தவிர தனது அனைத்து உறவினர்களும் தன்னுடன் இன்னும் பேசி வருவதாகவும், தனக்கு முழுமையான ஆதரவளித்து வருவதாகவும் கூறியிருக்கிறார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus