மீண்டும் ட்விட்டரில் களமிறங்கியிருக்கும் வனிதா விஜயகுமார்!
July 24, 2020 / 05:49 PM IST
|Follow Us
சமீபத்தில் இணையதளம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் செய்தி வனிதா, பீட்டர் பால் திருமணம் மற்றும் அதன் தொடர்பான பிரச்சனைகளும் ஆகும்.
பீட்டர் பாலின் முதல் மனைவி ஹெலன் தங்களுக்கு இன்னும் விவாகரத்து ஆகவில்லை என்ற செய்தியை வெளியிட்டது முதலே, பலரும் விமர்சித்து பதிவுகளை வெளியிட்டு வந்தார்கள். இதற்கு தக்க பதிலடி கொடுத்து வந்த வனிதா, சமீபத்தில் சூர்யா தேவி என்பவர் மீது சைபர் புல்லியிங் கேஸ் ஒன்றையும் கொடுத்தார்.
இதைத்தொடர்ந்து வனிதாவை மீண்டும் லட்சுமிராமகிருஷ்ணன், கஸ்தூரி, தயாரிப்பாளர் ரவீந்தர் ஆகியோர் விமர்சனம் செய்து வந்தார்கள். இதனால் வனிதா விஜயகுமார் சோஷியல் மீடியாவில் இருந்து விலகியிருக்க முடிவு செய்து, ட்விட்டரிலிருந்து விலகிவிட்டார்.
இவர் ட்விட்டரில் இருந்து விலகிய மறுநாளே மீண்டும் டுவிட்டர் பக்கம் வந்துவிட்டார் என்பதுதான் புதிய தகவல். தான் ட்விட்டரில் இருந்து ஏன் விலகினார் என்பதைப் பற்றி தான் அவர் முதல் ட்வீட் பதிவு செய்தார்.
“சமூக வலைத்தளத்தில் மக்கள் பேசும் தேவையில்லாத விஷயங்களுக்கு ரியாக்ட் செய்ய விரும்பாததனால் தான் ட்விட்டரிலிருந்து விலகி இருந்தேன். நான் இன்னும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன், ஓடிப் போகவில்லை. உங்களுக்கு என்னைப் பற்றி நன்றாக தெரியும். சில விஷயங்களைப் பற்றி விளக்கம் அளிக்க வேண்டியதாக இருந்தது அதனால்தான் தற்போது திரும்பி வந்துள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் ” நான் தஞ்சாவூர் ஆண்களைப் பற்றி அவதூறாக பேசவில்லை. தஞ்சாவூர் என் சொந்த ஊர். நான் அந்த ஊரின் கலாச்சாரம் பாரம்பரியத்தை பார்த்து பெருமைப்படுகிறேன். என் குடும்பம் போன்ற இருக்கும் தஞ்சாவூர் மக்களின் மனதை காயப்படுத்தும் வகையில் நான் எப்பொழுதும் எதையுமே பேசியதில்லை. தஞ்சாவூரில் இருந்து வந்திருக்கும் என் தந்தை கணவராக நன்றாக பார்த்துக் கொண்டார் என்றுதான் பெருமையாக பேசினேன். நான் ஏதாவது தவறாக சொல்லியிருந்தாலேம் பேசியிருந்தாலும் மன்னிப்பு கேட்க தயங்கியதே இல்லை. நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. உங்கள் மனதை புண்படுத்தும்படி தவறாக ஏதாவது கூறியிருந்தால் சாரி. என்றென்றும் தலை வணங்குகிறேன் என் தஞ்சை மண்ணுக்கு. தவறாக பேசி இருந்தால் மன்னித்து விடுங்கள் தம்பிகளே தங்கைகளே” என்று குறிப்பிட்டுள்ளார்.
தஞ்சாவூரில் இருக்கும் ஆண்களுக்கு எல்லாம் இரண்டு பொண்டாட்டிகள் இருப்பார்கள் என்று வனிதா அவதூறாக பேசியதாக தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை போலீசில் வனிதாவின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Tanjavour is my native and I am very proud of its heritage and culture..I never spoke anything to hurt any of my people who are all my family..I spoke very proudly that the men are so honest to take care of their families and be true to their commitments and responsibilities
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) July 23, 2020
இதற்கு விளக்கம் அளிப்பதற்காக தான் அவர் மீண்டும் ட்விட்டரில் வந்துள்ளார் என்று தெரிகிறது. இதற்கு வனிதாவின் ஆதரவாளர்கள் “நீங்கள் யாருக்கும் விளக்கம் அளிக்க தேவையில்லை. நீங்கள் எவ்வளவு கூறினாலும் தவறாக எடுக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் இப்படித்தான் பேசுவார்கள். உங்கள் விஷயத்தில் காங்கிரஸும் பாஜகவும் கூட ஒன்று சேர்ந்து விட்டது” என்று அவருக்கு ஆதரவு தெரிவித்து ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்கள்.
My fellow brothers and sisters from #Tanjore …kindly dont misinterpret my anger and tone to another issue as disrespectful to you..I am very sorry if I unintentionally said anything that may have hurt your feelings…endrendrum thalaivanungugiren en thanjai mannirku 🙏
I spoke highly of my father as a husband who is from tanjavour..my mother too is from #Tanjore but different castes…I will never feel bad to apologize for something I have said or done wrong if it really was wrong..I may have been misunderstood but have no such disrespect to
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) July 23, 2020