“நான் பீட்டர் பாலை பிரிந்து விட்டேன்”- வனிதா விஜயகுமார்!

  • October 21, 2020 / 09:39 PM IST

சமீப காலமாக இணையதளம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட செய்தி வனிதா விஜயகுமாரின் திருமணம் மற்றும் அதன் தொடர்பான விமர்சனங்களும் ஆகும். இதற்கு பலவாறு தன் பதிலடிகளை கொடுத்து வந்த வனிதா அவ்வப்போது சில பிரபலங்கள் குறித்தும் தன் கருத்துக்களைப் பேசி தன்னுடைய பாலோவர்ஸ் எண்ணிக்கையை அதிகரித்து வந்தார்.

வனிதா பிரச்சனை இணையதளத்தில் பரவ ஆரம்பித்தது முதல் அவருக்கு ஒரு செலிபிரிட்டி லுக் இணையதளத்தில் கிடைத்துள்ளது. இதனைப் பயன்படுத்தி குக்கரி சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

தற்போது தனது 40வது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக குடும்பத்துடன் கோவா சென்ற வனிதா அங்கு பீட்டர் பாலுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தி வந்தார். இந்த புகைப்படங்களை பலர் கலாய்த்து கமெண்ட் செய்து வந்தார்கள்.

இதைத்தொடர்ந்து கோவாவிலிருந்து திரும்பி வரும்போது பீட்டர் பாலுக்கும் வனிதாவுக்கும் பெரிய பிரச்சனை வெடித்ததாகவும், பீட்டரை வீட்டை விட்டு வெளியே துரத்திவிட்டார் வனிதா என்றும் தற்போது புதிய செய்தி பரவி வருகிறது.

தற்போது இதை உறுதி செய்யும் விதமாக வனிதா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பீட்டர் பால் குடி மற்றும் புகையிலைக்கு மிகவும் அடிமையாகியுள்ளார் என்றும், அதனால் அவரை விட்டு பிரிந்து விட்டதாகவும் கண்ணீர் மல்க கூறியுள்ளார். மேலும் பீட்டரின் மனைவி ஹெலனிடம் தனது மன்னிப்பைக் கேட்டுள்ளார்.

இந்த வீடியோவின் பின்னணியில் ஒரு ஆணின் குரல் கேட்டதாகவும் அது யார் என்றும் பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

https://youtu.be/cSnI0FE9za8

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus