SPB குறித்த ட்விட்டில் நடிகர் விஜய்யை பற்றி பேசிய வனிதா விஜயகுமார்!

  • September 28, 2020 / 08:00 PM IST

சமீப காலமாக இணையதளம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட செய்தி வனிதா விஜயகுமாரின் திருமணம் மற்றும் அதன் தொடர்பான விமர்சனங்களும் ஆகும்.

இதற்கு பலவாறு தன் பதிலடி கொடுத்து வந்த வனிதா அவ்வப்போது சில பிரபலங்கள் குறித்தும் தன் கருத்துக்களைப் பேசி தன்னுடைய பாலோவர்ஸ் எண்ணிக்கையை அதிகரித்து வந்தார்.

வனிதா பிரச்சனை இணையதளத்தில் பரவ ஆரம்பித்தது முதல் அவருக்கு ஒரு செலிபிரிட்டி லுக் இணையதளத்தில் கிடைத்துள்ளது. இதனைப் பயன்படுத்தி குக்கரி சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் தற்போது மறைந்த பிரபல பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் குறித்து பேசும்போது வனிதா எஸ்பிபியின் “மலரே மௌனமா” என்ற பாடலை விஜய்யை பாட சொல்லி நான் நச்சரிப்பேன், ஆனால் அவர் சிறிதும் முகம் சுளிக்காமல் எனக்காக அழகாக பாடிக் காட்டுவார் என்று குறிப்பிட்டுள்ளார்‌, இதை பல நெட்டிசன்கள் பலவாறு கலாய்த்து வருகிறார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus