பிக்பாஸ் வீட்டில் வனிதாவின் என்ட்ரீ எப்போது?

  • September 8, 2020 / 12:45 PM IST

சமீபத்தில் இணையதளம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட செய்தி வனிதா விஜயகுமார் மற்றும் பீட்டர் பால் திருமணம், அதன்பின் அவர்கள் திருமணத்தில் வந்த பிரச்சனை மற்றும் விமர்சனங்கள் ஆகும்.

இந்தப் பிரச்சினையில் லட்சுமி ராமகிருஷ்ணன் தொடங்கி பல பிரபலங்கள் தங்கள் கருத்துக்களையும் விமர்சனங்களையும் பதிவிட்டு அதற்கு வனிதா பதிலடியும் கொடுத்து வந்தார்.

ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதா பிரச்சனையில் கைதான சூர்யா தேவி கலந்துகொள்ளப் போவதாக ஒரு தகவல் வெளியானது.

இதைத்தொடர்ந்து தற்போது வனிதாவின் கணவர் பீட்டரின் முதல் மனைவி ஹெலன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவதாக ஒரு செய்தி வந்துள்ளது. இதனால் வனிதாவுக்கு எதிரான சூர்யா தேவி மற்றும் ஹெலன் இந்த நிகழ்ச்சியில் இருந்தால் என்னென்ன கலவரம் நடக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இதற்கிடையில் புதிய தகவல் என்னவென்றால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வையில்ய்கார்ட் என்ட்ரீ மூலம் வனிதாவை உள்ளே இறக்க பிக்பாஸ் டீம் முடிவு செய்துள்ளதாகவும், இதனால் நிகழ்ச்சியில் டிஆர்பி கண்டிப்பாக ராக்கெட் வேகத்தில் உயரும் என்றும் பிக்பாஸ் முடிவு செய்துள்ளதாம்.

அதுமட்டுமின்றி விஜய் டிவி புகழ் நாஞ்சில் விஜயனை கூட இறக்குவதற்கு பிக்பாஸ் முடிவு செய்துள்ளார்களாம். இப்படி மட்டும் நடந்தால் நிகழ்ச்சி களைகட்டும் என்பது உறுதி. வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் எப்போது கலந்து கொள்வார் என்பதில் தற்போது ஆர்வம் அதிகரித்துள்ளது.

ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்நுழையும் 14 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு குவாரண்டைனில் வைக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus